‘சென்னை புறநகர் ட்ரெயின்’... 'இந்த நாளில் இருந்து கூடுதலாக விடப்படும்’... ‘வெளியான அறிவிப்பு’...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை புறநகர் ரயில் சேவையின் ரயில் எண்ணிக்கை டிசம்பர் 7 முதல் அதிகரிக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட சென்னை புறநகர் ரயில் சேவை கடந்த மாதம் முதலில் அத்தியாவசிய பணியாளர்களுக்காக முதலில் தொடங்கப்பட்டது. பின்னர், அத்தியாவசிய தேவை இல்லாத பெண்களும், மாணவர்களும் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை புறநகர் ரயில் சேவையின் ரயில் எண்ணிக்கை டிசம்பர் 7 ஆம் தேதி முதல் 244-ல் இருந்து 320 ஆக அதிகரிக்கப்படவுள்ளது. மேலும், அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் பெண்கள் தவிர மற்ற பெண்கள், காலை 7.00 மணி முதல் 9.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 7.00 மணி வரையும் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்