'இது ‘குற்றம் 23' ஸ்டைல்'... 'என்னோட விந்தணு இல்லன்னா குழந்தை வந்திருக்குமா'?... சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நடிகர் அருண் விஜய் நடித்து ஹிட் ஆன திரைப்படம் குற்றம் 23. அதில் டெஸ்ட் டியூப் பெண்ணுக்கு விந்தணுவை தானம் செய்து விட்டு குழந்தை பிறப்பதற்கு முன்பு அவர்களை மிரட்டி பணம் பறிப்பதை ஒரு கும்பல் வழக்கமாகக் கொண்டிருக்கும். அதே பாணியில் சென்னையில் நடந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
Advertising

சென்னை எழும்பூர் பகுதியில் வசித்து வருபவர் கவிதா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வங்கியில் மேலாளராக இருக்கும் இவருக்கு, கடந்த 2008ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆகி 9 ஆண்டுகள் ஆன நிலையில், இந்த தம்பதிக்குக் குழந்தை இல்லை. இதனால் கணவன் மனைவிக்குள், அவ்வப்போது பிரச்சனை இருந்து வந்துள்ளது. ஒரு கட்டத்தில் பிரச்சனை அதிகமாக, கடந்த 2017-ஆம் ஆண்டு கணவரை விட்டுப் பிரித்து கவிதா தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கவிதா வேலை பார்க்கும் வங்கிக்கு, சென்னை பெரிய மேடு பகுதியைச் சேர்ந்த ரபியா பஸ்ரின் என்ற பெண் அவ்வப்போது வருவது வழக்கம். இதனால் கவிதாவுக்கும், அந்த பெண்ணுக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவரது கணவரான நாகூர் மீரானும் குடும்ப நண்பர் போல, கவிதாவிடம் பேசி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தனக்குக் குழந்தை இல்லாதது குறித்து நாகூர் மீரானிடம், கவிதா கூறி வருத்தப்பட்டுள்ளார்.

இதையடுத்து நாகூர் மீரான் மற்றும் ரபியா பஸ்ரின், தங்களுக்கு நன்கு தெரிந்த மருத்துவர் ஒருவர் திண்டுக்கல்லில் இருப்பதாகவும், அவரிடம் சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அவர்கள் இருவரும் கூறியதை நம்பிய கவிதா, திண்டுக்கல் சென்று அவர்கள் குறிப்பிட்ட மருத்துவர் உமாராணியிடம் சிகிச்சை பெற்று டெஸ்ட் டியூப் மூலம் இரட்டைப் பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். இதற்காக கவிதா நாகூர் மீரான் குடும்பத்திற்கு 13 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்துள்ளார்.

இந்த சூழ்நிலையில்  நாகூர் மீரான், குழந்தை பிறந்ததற்குத் தனது விந்தணு தான் காரணம், எனவே எனக்கு 25 லட்ச ரூபாய் தர வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத கவிதா, அவர் குறிப்பிட்ட தொகையை தரமுடியாது என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நாகூர் மீரான், நேற்று கவிதாவின் வீட்டிற்கு வந்து ஆபாசமாக பேசியதோடு, அவரை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். மேலும் பணத்தை கொடுக்கவில்லை என்றால் இரு குழந்தைகளையும் உயிரோடு பார்க்க முடியாது என மிரட்டியுள்ளார்.

இதனால் என்ன செய்வது என தெரியாமல் தவித்த கவிதா, சென்னை எழும்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், 4 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நாகூர் மீரானை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்