தனியார் ஹோட்டல் ‘இமெயில்’-க்கு வந்த ஒரே ஒரு மெசேஜ்.. வேகவேகமாக காவல் ஆணையரிடம் புகார்.. சென்னையில் பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை உட்பட 6 தனியார் ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி 74-வது சுதந்திர தினம் கோலகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. இதனால் நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் உட்பட 6 ஹோட்டல்களில் வெடிகுண்டு வெடிக்க போவதாக, அந்த தனியார் ஹோட்டலின் இமெயிலுக்கு குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த தனியார் ஹோட்டல் நிர்வாகம் உடனடியாக காவல் ஆணையர் இமெயிலுக்கு அந்த குறுந்தகவலை அனுப்பி புகார் அளித்துள்ளது.

இந்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் இமெயில் வந்த ஐடியை வைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இன்னும் 3 நாட்களில் சுதந்திர தினம் வர உள்ள நிலையில் இந்த வெடிகுண்டு மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஹோட்டல்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்