சென்னை மெட்ரோ ரயிலில் அதிரடி ஆஃபர்... பொங்கல் தினத்தின் 3 நாட்களும்... கட்டண சலுகை அறிவிப்பு

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அரசு பொது விடுமுறை நாட்களான பொங்கல் பண்டிகையின் 3 நாட்களிலும் மெட்ரோ ரயில் பயணச் சீட்டுகளில் அதிரடியாக சலுகை வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், பொது மக்கள் மற்றும் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக, அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் பயண அட்டை மற்றும் வரம்பற்ற பயண அட்டையைத் தவிர, மெட்ரோ ரயில் பயணச்சீட்டுகளில் 50% கட்டண சலுகை வழங்கி வருகிறது. இது 2020-ம் ஆண்டு அரசு பொது விடுமுறை நாட்களுக்கும் பொருந்தும். அதன்படி பொங்கல் அரசு விடுமுறை நாட்களான, 315, 16, 17 ஆகிய தேதிகளிலும் இச்சலுகை வழங்கப்படுகிறது.

மேலும் காணும் பொங்கல் நாளான 17-ம் தேதி அன்று, பொதுமக்கள் பெரும்பாலும் சென்னை மெரினா கடற்கரைக்கு வருவார்கள் என்பதால், அன்றைய தினம் அரசினர் தோட்டம், டி.எம்.எஸ். மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து  மெரினா கடற்கரை வரை பயணிகளின் வசதிக்காக, காலை முதல் இரவு வரை  'கேப்' (CAB) இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த சலுகைகளையும், வசதிகளையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

METRO, CHENNAI, PONGAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்