'இனிமேல் இந்த வகுப்பில் மகளிர் மட்டுமே பயணிக்க முடியும்'... புதிய அறிவிப்பை வெளியிட்ட சென்னை மெட்ரோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை மெட்ரோ ரயில்களில் உள்ள முதல் வகுப்பு பெட்டிகளில் சாதாரண வகுப்பு பெட்டிகளில் உள்ள கட்டணத்தை விடச் சற்று அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் திங்கட்கிழமையிலிருந்து முதல் வகுப்பு பெட்டிகளில் மகளிர் மட்டுமே பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக முதல் வகுப்பு பெட்டிகள் மகளிர் பயணிப்பதற்கான வகையில் பிரத்தியேக பெட்டிகளாக மாற்றப்பட இருக்கிறது.

அதேநேரத்தில் பிரத்தியேக பெட்டியாக மாற்றினாலும் சாதாரண கட்டணத்திலேயே பெண்கள் பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரத்தியேக பெட்டிகள் மூலம் பெண் பயணிகள் அதிக அளவில் பயணம் செய்யும் வகையில் அதிக இருக்கைகள் ஏற்படுத்திட முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்