காதலி வீட்டில் காதலன் செய்யுற வேலையா இது.. மொத்த குடும்பமும் பரிதவிப்பு

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை : சம்பளம் கொடுக்க வேண்டி, கணவர் வைத்திருந்த பணம் காணாமல் போன நிலையில், விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது.

Advertising
>
Advertising

சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் பவித்ரா. இவர் அப்பகுதியிலுள்ள மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

பவித்ராவின் கணவர், அமரர் ஊர்தி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

போலீசில் புகார்

பவித்ராவின் புகாரில், அமரர் ஊர்தி நிறுவனம் நடத்தி வரும் தனது கணவர், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக வைத்திருந்த சுமார் 2 லட்ச ரூபாய் பணம் மற்றும் பீரோவில் இருந்த 21 சவரன் நகை திருடு போனதாக தனது மனுவில் பவித்ரா குறிப்பிட்டிருந்தார்.

அதிர்ச்சி தகவல்கள்

இதனைத் தொடர்ந்து, பவித்ராவின் வீட்டைச் சுற்றியுள்ள பகுதியின் சிசிடிவி காட்சிகளை போலீசார் சோதனை செய்து பார்த்தனர். அப்போது, பவித்ராவின் வீட்டில் இருந்து வந்த ஒருவர், பணத்தைத் திருடிச் சென்றுள்ளது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, பவித்ராவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சில அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

திருடிச் சென்ற காதலன்

சுமன் என்பவருடன் பேஸ்புக் மூலம் பவித்ராவிற்கு பழக்கம் ஏற்பட்டு, நாளைடைவில் காதலாகவும் மாறியுள்ளது. இதன் பிறகு, காதலி பவித்ரா வீட்டிற்கு வந்த சுமன், திரும்பிச் சென்ற போது பணம் மற்றும் நகைகளைத் திருடிச் சென்றதும் உறுதியானது. ஆனால், இது பற்றி பவித்ரா எதுவும் அறியாமல் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சொகுசு வாழ்க்கை

இதன் பேரில் சுமனைக் கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். பவித்ராவிடம் இருந்து திருடிய பணம் மற்றும் நகைகளைக் கொண்டு, கார் ஒன்றை வாங்கி, சொகுசு வாழ்க்கையையும் சுமன் வாழ்ந்து வந்தது போலீஸ் விசாரணையில் அம்பலம் ஆகியுள்ளது.

பேஸ்புக் மூலம் பழக்கமான ஒருவன், பெண்ணின் வீட்டில் இருந்து நகை மற்றும் பணத்தினை திருடிச் சென்ற சம்பவம், அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LOVER, THEFT, BOY FRIEND, FACEBOOK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்