“அம்மா எங்கே?”.. அண்ணன் கிட்ட தம்பி சொன்ன பதில்.. சென்னையில் நடந்த பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் உயிரிழந்த தாயை அடக்கம் செய்ய பணம் இல்லையென மகன் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "ஒரு பொண்ணுக்கு 3 முறை கல்யாணமா.?".. இந்த கிராமத்தில் தொடரும் வியக்க வைக்கும் கலாச்சாரம்..!

சென்னை நீலாங்கரை சரஸ்வதி நகரை சேர்ந்தவர் செண்பகம் (வயது 86). இவருடைய மகன் சுரேஷ் (வயது 53). இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். சுரேஷ் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இவருக்கு திருமணமாகிய நிலையில், மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதை காரணம் காட்டி மனைவி பிரிந்து சென்றுள்ளார்.

இந்த நிலையில் சில நாட்களாக மாமியார் செண்பகத்தை காணவில்லை என சுரேஷின் மனைவி, சுரேஷின் அண்ணனிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து உடனே வீட்டிற்கு சென்ற சுரேஷின் அண்ணன், அவரிடம் தாய் குறித்து கேட்டுள்ளார். அப்போது, தாய் செண்பகம் உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், தாயின் உடலை எங்கே என கேட்டுள்ளார். அதற்கு, தாயை அடக்கம் செய்ய பணம் இல்லாததால், அவரை வீட்டில் இருந்த டிரம்மில் போட்டு சிமெண்ட் வைத்து பூசி மூடி அடக்கம் செய்து விட்டதாக சுரேஷ் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சுரேஷின் அண்ணன், இதுகுறித்து நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், டிரமில் மூடப்பட்டிருந்த மூதாட்டியின் உடலை மீட்க முடியாததால், டிரம் உடன் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

CHENNAI, MAN, MOTHER, CEMENT, DRUM, சென்னை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்