சென்னையில் Live in together-ல் வாழ்ந்த காதலர்கள்.. திடீரென வீட்டுக்குள் கேட்ட அலறல் சத்தம்.. அதிர்ச்சி சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் விபரீதம் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

சென்னை பெரியமேடு அடுத்த சூளை பகுதியில் வசித்து வந்தவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சந்தீப் ஜெயின் (வயது 40). இவர் சவுகார்பேட்டையில் துணிக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். திருமணமான சந்தீப் ஜெயின், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றார்.

இந்த நிலையில் அவருக்கு இளைச்சி (வயது 35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இளைச்சியும் தனது கணவரை பிரிந்து விவாகரத்து பெற்றவர். இருவரும் சென்னை சூளையில் தனியார் குடியிருப்பில் சில ஆண்டுகளாக லிவிங் டுகெதர் (Live in together) முறையில் வசித்து வந்ந்துள்ளனர்.

இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை இளைச்சி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார்.  இதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ரயிலில் செல்வதற்காக தயாராக இருந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் திடீரென வீட்டுக்குள் சந்தீப் ஜெயின் மற்றும் இளைச்சியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. உடனே அக்கம்பக்கத்தினர் பெரியமேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் வந்து பார்த்த போது இருவரும் தீ வைத்துக் கொண்டது தெரியவந்துள்ளது.

இதில் படுகாயமடைந்த இளைச்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 80 சதவீத காயத்துடன் கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் சந்தீப் ஜெயின் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சந்தீப் ஜெயின் இளைச்சியை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்தாரா?, அல்லது இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தனரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CHENNAI, LIVE IN TOGETHER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்