'கிஃப்ட் கொடுக்க ஸ்டேஜ்ல ஏறுனப்போ...' 'மொத்த கல்யாண மண்டபமுமே திரும்பி பார்த்துருக்கு...' - காரணம், நண்பர்கள் கொடுத்த கிஃப்ட் அப்படி...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை மதுரவாயல் பகுதியில் நண்பரின் திருமணத்திற்கு சின்ன வெங்காயம், பெட்ரோல், சமையல் எரிவாயு போன்ற பொருட்களை பரிசாக வழங்கிய சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது எனலாம்.

பொதுவாகவே திருமணத்தின் போது மணமக்களுக்கு பரிசுகள் கொடுப்பது சாதாரணம். ஆனால் சாதாரண பொருட்களை கொடுக்காமல் இன்றைய காலகட்டத்தில் விலைமிகுந்த பொருட்களை கொடுத்துள்ளனர் மதுரவாயிலை சேர்ந்த நண்பர்கள் குழு.

சென்னனை தனியார் மண்டபத்தில் மதுரவாயலை சேர்ந்த கார்த்திக்-சரண்யா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, பங்கேற்ற மணமகனின் நண்பர்கள் 5 லிட்டர் பெட்ரோல், சின்ன வெங்காய மாலை, சமையல் எரிவாயு ஆகியவற்றை பரிசாக கொடுத்து மண்டபத்தையே திரும்பிப்பார்க்க வைத்துள்ளனர்.

தற்போது விலைவாசி ஏறிக்கொண்டிருக்கும் இந்த பொருட்களை பரிசாக கொடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர். சமீப காலமாக நாடு முழுவதும் பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து சதத்தை அடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்