“நண்பனின் கால் நரம்பை..”.. “போதையில் அரங்கேறிய சம்பவம்!”.. சென்னையில் கைது செய்யப்பட்ட நபர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரும் அதே பகுதியை சேர்ந்த லோகேஷ் என்பவரும் நண்பர்கள். இருவரும் நேற்று முன்தினம் ஒன்று சேர்ந்து மது அருந்தினர்.

அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் ஆத்திரமடைந்த லோகேஷ், நண்பன் மோகனின் கால் நரம்பில் வெட்டியுள்ளார். ஆனால் போதையில் இருந்ததால், இது தெரியாமல் மோகன் அங்கிருந்து நடந்து சென்றுவிட்டார்.

சிறிது தூரம் நடந்து சென்ற பிறகே, மோகன் கீழே விழுந்தார். கால் நரம்பு வெட்டப்பட்டு ரத்தம் வெளியேறியதால் மோகன் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாப்பூர் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 

மோகனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் கொலை செய்த குற்றத்திற்காக  லோகேஷையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FRIEND

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்