'எங்க மொத்த சொத்தே நீ தானே'... 'இதுக்காகவா இப்படி செஞ்ச'... 'கதறிய பெற்றோர்'... சென்னை என்ஜினீயரிங் மாணவர் எடுத்த முடிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை செய்து கொண்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்காக காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

Advertising
Advertising

சென்னையை அடுத்த மணலியைச் சேர்ந்தவர் நடராஜன். 21 வயது இளைஞரான இவர், என்ஜினீயரிங் படித்து வந்துள்ளார். தற்போது ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுவிட்டு தனது அறைக்கு நடராஜன் தூங்கச் சென்றுள்ளார். நேற்று காலை வெகுநேரமாகியும் நடராஜன், அறையிலிருந்து வெளியே வரவில்லை. காலையில் சாப்பிட நேரம் ஆகிவிட்டதே இன்னும் மகன் வெளியே வரவில்லையே என அவரது பெற்றோர், மகனின் அறைக்குச் சென்று பார்த்துள்ளார்கள்.

அப்போது அவர்கள் கண்ட காட்சி நடராஜனின் பெற்றோரை நிலைகுலையச் செய்துள்ளது. தாங்கள் ஆசையாக வளர்த்த மகன் தூக்கில் சடலமாகத் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கதறித் துடித்தார்கள். இதுபற்றி தகவல் அறிந்து வந்த மணலி போலீசார், தூக்கில் தொங்கிய நடராஜன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. அதில் மாணவர் நடராஜன், தன்னுடன் படிக்கும் மாணவி ஒருவரைத் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த பெண், வேறு ஒரு மாணவரிடம் சிரித்துப் பேசி பழகி உள்ளார். இதைப் பார்த்த நடராஜன் நான் உயிருக்கு உயிராகக் காதலிக்கும் பெண், வேறு ஒருவருடன் சிரித்துப் பழகுவதால் மனமுடைந்து தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் கூறியுள்ளார்கள்.

தான் இந்த கொடூர முடிவை எடுக்கும் முன்பு நடராஜன் தனது பெற்றோரைச் சிறிதேனும் நினைத்துப் பார்த்திருக்க வேண்டும். தற்போதைய இளைஞர்கள் சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் அவரசப்பட்டு தற்கொலை என்னும் கொடூர முடிவை எடுப்பது வேதனையாக உள்ளது என காவல்துறையினர் கூறியுள்ளார்கள். ஒரு முறை மட்டுமே கிடைக்கும் இந்த வாழ்க்கையை இதுபோன்ற காரணங்களுக்காக இளைஞர்கள் வீணாக்கிக் கொள்வது தான் சோகத்தின் உச்சம்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றைத் தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்