‘நிற்க இடமின்றி நடக்கும் வியாபாரம்’.. மீண்டும் விற்பனையை தொடங்கிய சென்னையின் ‘பிரபல’ வணிக ஏரியா..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையின் பிரபல எலக்ட்ரானிக்ஸ் சந்தை மையமான ரிச்சி ஸ்ட்ரீட் மீண்டும் வணிகத்தை தொடங்கியுள்ளது.

Advertising
Advertising

இந்தியாவிலேயே டெல்லியில் உள்ள நேரு அரண்மனைக்கு பிறகு சென்னையில் உள்ள ரிச்சி ஸ்ட்ரீட்தான் எலக்ட்ரானிக்ஸ் பொருள்களுக்கான மிகப்பெரிய வணிக சந்தை. இங்கு கம்ப்யூட்டர்கள், செல்போன்கள் மற்றும் பல எலக்ட்ரானிக் சாதனங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தெருவில் மலிவான விலையில் நல்ல தரமான பல எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் கிடைக்கின்றன.

இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு வருபவர்கள் இந்த தெருவுக்கு ஒருமுறையேனும் செல்லாமல் இருக்கமட்டார்கள் என சொல்லப்படுகிறது. நடந்த செல்ல கூட இடமில்லாமல் தினமும் கூட்டமாக காணப்படும் இந்த ரிச்சி ஸ்ட்ரீட் ஊரடங்கு காரணமாக சில நாள்களாக மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் ரிச்சி ஸ்ட்ரீட்டில் வணிகம் தொடங்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்