சென்னை முழுவதும்.. மொதல்ல ‘இத’ பண்ணுங்க!! நிவர் புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக ‘மாநகராட்சி’ வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகர்ந்துகொண்டிருக்கும் நிவர் புயல் தமிழகத்தில் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே மணிக்கு 120 கி.மீ வேகத்தில் கரையைக் கடக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வானிலை ஆய்வு மையத்தின் அறுவுறுத்தலின்படி அரசாங்கம் பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து வருவதுடன், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினரை தயார் நிலையை வைத்துள்ளதாகவும் தெரிவித்து வருகிறது.

ALSO READ:சென்னை, செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு:  ‘இந்த பகுதிகளில்’ வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு... மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!

இதன் தொடர்ச்சியாக,  நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக சென்னையில் அனைத்து பேனர் மற்றும் பதாகைகளை அகற்ற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டதன் பேரில் அதற்கான நடவடிக்கைகள் விரைந்து செயல்படுத்தப்படுகின்றன.

புயல் நேரங்களில் பேனர்கள் அறுந்து விழுந்தால் உருவாகும் ஆபத்துகளை கவனத்தில் கொண்டு இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்