VIDEO: 'ஓடும் பேருந்தின் கூரை மீது பயணம்'!.. சென்னையில் கல்லூரி மாணவர்கள் செய்த அட்டகாசம்..! பரபரப்பு வீடியோ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் ஓடும் பேருந்தின் கூரை மீது ஏறி அட்டகாசம் செய்த கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை மந்தைவெளி முதல் பிராட்வே செல்லும் மாநகர பேருந்து நேற்று மாலை ராயப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி நிறுத்தத்தில் நின்றுள்ளது. அப்போது கல்லூரி மாணவர்கள் சிலர் கூட்டமாக பேருந்தில் ஏறியுள்ளனர். பேருந்து அண்ணாசாலை வந்ததும் இரு கல்லூரி மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடியும், மேற்கூரையில் ஏறியும் ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளனர்.

இதனால் பேருந்தின் உள்ளே இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அப்போது மாணவர்களை இந்த செயலை ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனால் அடுத்த பேருந்து நிறுத்ததில் போலீசார் தயார் நிலையில் இருந்துள்ளனர். சிம்சன் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து வந்ததும் அட்டாகாசத்தில் ஈடுபட்ட இரண்டு மாணவர்களை மடக்கி பிடித்துள்ளனர். இதனை அடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

COLLEGESTUDENTS, CHENNAI, MTC, BUS, VIRAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்