'லாரியில இருந்த கண்ணு படம் தான் க்ளூ...' '4 நாளா அல்லும்பகலும் சோதனை...' 'கடைசியா வந்த லாரியில அதே மாதிரி கண்ணு...' - உச்சக்கட்ட பரபரப்பு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இதன் அடிப்படையில் பரங்கிமலை காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் துறையினர் விசாரணையை தொடங்கினர். இந்த தீவிர விசாரணையில் மகேஷ் என்பவர் கஞ்சாவை மொத்த விற்பனைக்கு வியாபாரம் செய்தது தெரிய வந்துள்ளது.

அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் லாரியில் கஞ்சா கடத்தி தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்படுவதாகவும், அந்த லாரியின் மீது கண்கள் படம் வரையப்பட்டிருக்கும் எனவும் தெரிய வந்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் செங்குன்றம் சோதனைச் சாவடியில் இரவும் பகலும் என 4 தினங்களாக தொடர்ந்து போலீசார் சோதனை நடத்தினர். அப்போது குறிப்பிட்ட அடையாளங்களுடன் ஐம்பது கருவாடு மூட்டைகளோடு லாரி ஒன்று வந்தது. அந்த லாரியை சோதனைக்கு உட்படுத்திய போலீசார் லாரியில் இருந்த 75 லட்சம் மதிப்புள்ள 9 கஞ்சா மூட்டைள் இருந்ததை கண்டறிந்து கைப்பற்றினர்.

இந்த சம்பவம் தொடர்பாக மகேஷ், முரளி, திண்டுக்கல்லை சேர்ந்த மகுடேஸ்வரன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணை நடத்தியதில் 1.50 லட்சம் பணத்தை வாங்கிக்கொண்டு டிரைவர் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதும் கஞ்சா மூட்டைகள் விசாகப்பட்டினம் அருகே உள்ள 'துனி' மலைப்பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. சிறப்பாக செயல்பட்டு கடத்தல் கும்பலைப் பிடித்த காவல் ஆய்வாளர் ராஜலெட்சுமிக்கு சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் பரிசு வழங்கி வெகுவாக பாராட்டியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்