'கொஞ்சமும் எதிர்பார்க்கல...' 'டிக்கட் கொடுத்துட்டு இருந்த கண்டக்டர்...' 'டக்குனு பிரேக் போட்டதால...' - எதிர்பாராமல் நடந்த அதிர்ச்சி சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையை அடுத்த ‌ஆவடி அருகே மினி பஸ்ஸின் முன்பக்க கண்ணாடியை‌ உடைத்துக் கொண்டு நடத்துநர் கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி அருகே காமராஜர் நகரில் மினி பஸ் சென்று கொண்டிருந்தபோது, சாலையின் குறுக்கே குழந்தை ஓடி வர அதை கவனித்த ஓட்டுநர் சேகர் வண்டியை உடனடியாக பிரேக் அழுத்தி நிறுத்தி உள்ளார். பிரேக் அழுத்தத்தினால் அப்போது, மினி பஸ்ஸில் டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்த நடத்துனர் ஆறுமுகம், நிலைதடுமாறி முன்பக்க திசைவேகத்துடன் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக் கொண்டு கீழே விழுந்துள்ளார்.

காயமடைந்த அவர் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்