5 ஆயிரத்தை 'கடந்த' எண்ணிக்கை... '800க்கும்' மேற்பட்ட பாதிப்புடன் உள்ள மண்டலங்கள்... 'விவரங்கள்' உள்ளே...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்பது குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9,227 ஆக உள்ள நிலையில், அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்முலம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,262 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 890 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதையடுத்து கோடம்பாக்கத்தில் 835 பேருக்கும், திரு.வி.க.நகரில் 662 பேருக்கும், தேனாம்பேட்டையில் 564 பேருக்கும், அண்ணாநகரில் 448 பேருக்கும், வளசரவாக்கத்தில் 450 பேருக்கும், தண்டையார்பேட்டையில் 402 பேரும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களான அடையாறில் 290 பேருக்கும், அம்பத்தூரில் 254 பேருக்கும், திருவொற்றியூரில் 120 பேருக்கும், பெருங்குடியில் 64 பேருக்கும், மாதவரத்தில் 72 பேருக்கும், மணலியில் 66 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 64 பேருக்கும், ஆலந்தூரில் 61 பேருக்கும் இதுவரை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்