'கொரோனா கொஞ்சம் ஓரமா போய் விளையாடு'... 'இந்தியாவுக்கே மாஸ் காட்டிய 97 வயது சென்னை தாத்தா'... சிலிர்க்க வைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா குறித்த அச்சம் அதிகரித்து வரும் நிலையில், சென்னையைச் சேர்ந்த  97 வயது முதியவர் பலருக்கும் புதிய நம்பிக்கையை அளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் கொரோனாவின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. இது சென்னை மக்களுக்கு பெரும் அச்சத்தையும், கவலையையும் அளித்துள்ளது. நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள்,  முதியவர்களுக்கு இந்த நோய் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்தச்சூழ்நிலையில் சென்னையைச் சேர்ந்த 97 வயது முதியவர் கிருஷ்ணமூர்த்தி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளது, பலருக்கும் நம்பிக்கையை அளித்துள்ளது. கிருஷ்ணமூர்த்திக்குக் கடந்த மாதம் 30ம் தேதி கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது அவருக்கு மூச்சுத்திணறல் இருந்துள்ளது.

ஏற்கனவே அவர், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய பாதிப்பு இருந்ததால் அவருக்கு உடனடியாக, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. அதன் பயனாக அவருக்குக் காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பாதிப்பு குறைந்து, செயற்கை சுவாசம் நீக்கப்பட்டது. அதன் பிறகு அவரது உடல்நிலை இயல்பு நிலைக்குத் திரும்பிய நிலையில், மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவு நெகட்டிவ் என வந்ததால், அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதனிடையே தமிழகத்தில் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்ற வயதான நபர் என்றும், அதிலும் இந்தியாவிலேயே கொரோனாவை வென்ற இரண்டாவது வயதான நபர் கிருஷ்ணமூர்த்தி என, மருத்துவமனை தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்