VIDEO: '23-வது மாடியில திகில் சாகசம் செய்த சிறுமி...' 'நெஞ்சை உறைய செய்யும் திக்திக் நிமிடங்கள்...' - சென்னை சிறுமியின் வைரல் வீடியோ...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஸ்பைடர் மேன் படத்தில் வருவது போல 15 வயது சிறுமி ஒருவர் 23-வது மாடியை வெளிப்புறமாக சுற்றி வந்த சம்பவம் பார்ப்பவரை பதைபதைப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

தற்போது வைரல் ஆகியுள்ள வீடியோவில் மர்ம உருவம் ஒன்று மிக பெரிய கட்டிடத்தின் விளிம்பில் சுற்றி திரியும் காட்சிகள் வெளிவந்தது. இந்நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், சம்பந்தப்பட்ட நபர் 15 வயது சிறுமி என கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

அந்த பெண் செங்கல்பட்டு மாவட்டம், பழைய மாமல்லபுரம் சாலை நாவலூர் பகுதியில் இருக்கும் 25 அடுக்குகள் கொண்ட ஹிரானந்தனி குடியிருப்பில் வசிப்பவர் என கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த வீடியோவை எதிர் பிளாட்டில் இருப்பவர் வீடியோ எடுத்ததும் தெரிய வந்துள்ளது.

விசாரணையில், பட்டப்பகலில் அடுக்குமாடி கட்டிடத்தின் 23-வது மாடியை சுற்றி அமைக்கப்பட்டுள்ள வெளிப்புற விளிம்பில் தலைவிரிகோலமாக ஏதோ ஒரு உருவம் தெரிந்ததால் வீடியோ எடுத்துள்ளனர். மேலும் 15 வயது சிறுமி இதே போல் 3 முறை அந்த விளிம்பில் சுற்றியுள்ளார். எனவும் கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.

மேலும் சாகசத்தில் ஈடுபட்ட சிறுமியின் பெற்றோரிடம் கேளம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், அண்ணன் தங்கைக்கு இடையே நடந்த போட்டியின் காரணமாக ஒரு உற்சாகத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு இது போன்ற விபரீத செயலில் ஈடுபட்டதாக ஒப்புக் கொண்டனர்.


இதுகுறித்து வருத்தம் தெரிவித்த சிறுமியின் பெற்றோர்  இதுபோன்ற செயல்கள் மீண்டும் நடைபெறாது என வாக்குறுதியும் அளித்துள்ளனர். அதன்பெயரில் சிறுமியையும் அவரது குடும்பத்தாரையும் காவல்துறையினர் விடுவித்தனர்.

சிறுமி செய்த சாகசங்களை ஊக்கப்படுத்துவது அவர்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ள பயன்பட்டாலும், அதற்குரிய பயிற்சிகளையும், பாதுகாப்பு செயல்முறைகளையும் பயன்படுத்துவது முக்கியமாகிறது என்பதையும் நாம் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்