"கோலமிடப் போன போது"... "அதிகாலையில் அதிர்ச்சி சம்பவம்"... "புதுக்கோட்டையில் பயங்கரம்"... "நடந்தது என்ன?"...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம், மர்ம நபர்கள் செயினை பறித்துச் சென்ற சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

புதுக்கோட்டை சார்லஸ் நகரைச் சேர்ந்தவர், விஜயகுமார். அவர் மனைவி மீனாள், வழக்கம்போல் இன்று காலை வீட்டு வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்தார்.

அந்த சமயம், அவர் வீட்டு வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், மீனாள் கழுத்தில் இருந்த 13 சவரன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். மீனாள் சத்தம் போட்டதைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்துள்ளனர். ஆனால், அதற்குள் திருடர்கள் அங்கிருந்து தப்பித்துவிட்டனர்.

இந்த செயின் பறிப்பு சம்பவம் குறித்து, போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அருகேயுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் அரங்கேறியுள்ள இந்த சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CHAINSNATCHING, PUDUKOTTAI, KOLAM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்