‘தனியா நடந்து போகும்போது ரொம்ப உஷாரா இருங்க’.. சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் பைக்கில் சென்ற மர்ம நபர்கள் செல்போன் பறிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எர்ணாவூர் பகுதியில் ஜெய்ஹிந்த் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர், வீட்டிற்கு மளிகைப் பொருள்கள் வாங்குவதற்காக அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். பொருள்கள் வாங்கிவிட்டு வீட்டிற்கு தனியாக செல்போனில் பேசியபடி நடந்து சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அப்பெண்ணிடம் இருந்து செல்போனை பறிக்க முயன்றுள்ளனர்.

இதனால் அப்பெண் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. அதற்குள் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். நல்லவேளையாக கொள்ளையர்களிடம் செல்போனை அப்பெண் பறிகொடுக்கவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் சிசிடிவி காட்சியின் அடிப்படையில் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு பாண்டி பஜாரில் அதிகாலை வாக்கிங் சென்ற நபரிடம் பைக்கில் வந்த மர்ம நபர் செல்போனை பறித்து சென்றது குறிப்பிடத்தக்கது.

CCTV, CHENNAI, MOBILESNATCHING, WOMAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்