திருமணம் செய்ய மறுத்த அக்கா... தனது திருமணம் தள்ளிப்போனதால் தம்பி செய்த விபரீதம்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ராமநாதபுரத்தில் தனக்கு திருமணம் தாமதம் ஆவதாக சொல்லி  அக்காவை கழுத்தறுத்துக் கொலை செய்த தம்பி தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.

Advertising
>
Advertising

ராமநாதபுரம் நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம்.  இவர் தனியார் திருமண மகாலில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.  இவரது  மகள் சுவாதி எம்.இ பட்டதாரி, இவருக்கு திருமணம் செய்து கொள்ளுமாறு சுவாதியின் தம்பி சரண்  மற்றும் குடும்பத்தில் உள்ளவர்கள் வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சுவாதி மேற்படிப்பு படிக்க வேண்டும் என்பதற்காக திருமணத்தை தள்ளிப்போட்டதாக தெரிகிறது.

இதனால் அக்கா சுவாதிக்கும் அவரது  தம்பி சரணுக்கும்  இடையே வீட்டில் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறதாம். இந்த நிலையில் கடந்த இரண்டு நாள் முன்பு வழக்கம்போல சுவாதிக்கும்  அவரது தம்பி சரணுக்கும்  இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த  சுவாதியின் தம்பி சரண்  வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து அக்கா சுவாதியை கழுத்து அறுத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் வீட்டிலிருந்து சுவாதியின்  தம்பி சரண் தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார், சுவாதியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய சரண் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை  தீவிரமாக தேடி வந்தனர். அவரை தேடி வந்த போலீசார் இன்று சரணை கைது செய்தனர். இந்த சம்பவம் ராமநாதபுரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

CRIME, RAMNAD, MURDERCASE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்