'திருமண ஊர்வலத்தில் மாஸ் காட்டிய கல்யாண பொண்ணு'... 'வாயடைத்து போன சொந்தங்கள்'... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் மணக்கோலத்தில் மணப்பெண் இரண்டு கைகளில் சிலம்பம் மற்றும் சுருள் வாள் வீசி அசத்திய வீடியோ வைரலாகி வருகிறது.

தூத்துக்குடியின் தேமான்குளத்தைச் சேர்ந்த ராஜ்குமார் - நிஷா தம்பதிக்குத் திருமணம் சிறப்பாக நடந்த நிலையில் மணமக்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். அப்போது, மணப்பெண் நிஷா, மணக்கோலத்திலேயே இரண்டு கைகளில் சிலம்பத்தைச் சுற்றி அசத்தினார். பாரம்பரியக் கலையான சுருள் வாள் வீசியும் திருமணத்திற்கு வந்திருந்த சொந்தங்களை வாயடைத்துப் போக வைத்தார்.

மணப்பெண் நிஷாவின் அசாத்திய செயலை அங்கிருந்தவர்கள் பிரமிப்போடு பார்த்து கைதட்டி ரசித்தார்கள். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்