இந்த மெசேஜ் அனுப்பியது யாரு? சந்தேகப்பட்டு அடித்து உதைத்த காதலன்.. காதலி எடுத்த அதிரடி முடிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை : சென்னையில் காதலியை சந்தேகப்பட்டு அடித்து உதைத்த காதலனை கொரட்டூர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Advertising
>
Advertising

பெண்களுக்கு எதிரான வன்முறை:

பொதுவாக ஆண் பெண் உறவுகளில் பல விதமான பிரச்சனைகள் உருவாகிறது. அதிலும் சந்தேகம் என்ற நோய் புகுந்து விட்டால் அந்த உறவு சின்னாபின்னமாகி விடும். இங்கு காதலிக்கப்படுபவர் தனக்கு உரிமையானவர் போன்ற போக்கு நிலவுகிறது. காலம் காலமாக ஆண்களால் பெண்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த சூழல் மாறி வருகிறது.

பெண்கள் வேலைக்கு போகிறார்கள், சம்பாதிக்கிறார்கள், எனவே இங்கு யாரிடம் பேச வேண்டும் என்ன உடை உடுத்த வேண்டும் என்று யாரும் தங்களை கட்டுப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை என்பதை தொடர்ந்து பெண்ணியவாதிகளும், சமூக ஆர்வலர்களும் கூறி வருகின்றனர். ஆனால், படிப்படியாக சில மாற்றங்கள் நிகழ்ந்தாலும் இந்திய மரபார்ந்த ஆண்கள் பழமை தன்மையோடு பெண்களை அணுகுகின்றனர்.

நான்கு வருடங்களாக காதல்:

இந்த நிலையில், சென்னை பாடி, சி.டி.எச் சாலை மேம்பாலம் அருகே பிரபல டெக்ஸ்டைல்ஸ் ஒன்றில், திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகா, கரும்பூந்தி கிராமத்தைச் சார்ந்த சவேதா (20) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் இதே பகுதியில் இருக்கும், பார்க் ரோட்டில் உள்ள துணி கடைக்கு சொந்தமான விடுதி ஒன்றில் தங்கியுள்ளார். இவரும், திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் தாலுகா, இரும்பூண்டி கிராமத்தை சேர்ந்த நவீன்குமார் ( 21) என்ற இளைஞரும் ஒன்றாக திருவண்ணாமலையில் உள்ள கலை கல்லூரியில் படித்து உள்ளனர். இந்த நிலையில், இவர்கள் இருவரும் நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த மெசேஜ் யாரு அனுப்பியது?

இந்த நிலையில், நேற்றைய தினம் நவீன் குமார், சவேதாவை பார்க்க பாடியில் உள்ள விடுதிக்கு போயுள்ளார். அப்போது, நவீன்குமார் திடீரென்று சவேதா செல்போனை வாங்கி பார்த்துள்ளார். அப்போது அதில் வந்த மெசேஜ் யாருடையது என கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர் சவேதாவை அசிங்கமாகவும் திட்டியதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் அதிகரித்ததால் ஆத்திரம் அடைந்த நவீன்குமார், சவேதாவை அடித்து உதைத்துள்ளார்.

காவல் நிலையத்தில் புகார்:

கோவம் அடைந்த சவேதா உடனடியாக கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனை ஏற்று இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தற்போது காவல்துறையினர் நவீன் குமாரை கைது செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

BEAT, BOYFRIEND, GIRLFRIEND, CHENNAI, சென்னை, காதலன், அடி, காதலி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்