சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேசனில்... தாயுடன் தூங்கிய குழந்தை... சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் இரண்டு முக்கிய இடங்களில் அடுத்தடுத்து குழந்தைகள் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் குவாஹத்தியைச் சேர்ந்தவர் மர்சீனா. இவர் தனது 2 பெண் குழந்தைகளுடன் சென்னை வந்துள்ளார். கூடவே மர்சீனாவின் நண்பர் அமித் என்பவரும் வந்துள்ளார். பின்னர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடையில், இவர்கள் 4 பேரும் உறங்கிக் கொண்டிருந்தனர். பின்னர் எழுந்து பார்த்தபோது, மர்சீனாவின் 2 பெண் குழந்தைகளில் ரஷிதா என்ற 2 வயது குழந்தை காணாமல் போனது. சுற்றி முற்றியும் தேடிப் பார்த்ததில் குழந்தை காணாததைக் கண்ட தாய் மர்சீனா, பதறிப்போனார்.

அதன்பிறகு, சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடம் மர்சீனா புகார் அளித்தார். இதையடுத்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, யாரோ ஒருவர், மர்சீனாவின் 2 வயது பெண் குழந்தையை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை கடத்திய நபரை தேடி வருகின்றனர். இதேபோல், மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் ஜானி- ரந்தேஷா போசல் தம்பதி. இவர்களுக்கு ஜான் என்ற 8 மாத ஆண் குழந்தை உள்ளது.

சென்னை மெரினா கடற்கரை மணற்பரப்பில் தங்கி பலூன் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களது குழந்தையை, சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறியும், அதற்காக பணம் தருவதாக சொல்லி, 20 வயது மர்ம பெண் ஒருவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு குழந்தைக்கு ஆடை மாற்ற வேண்டும் எனக் கூறி குழந்தையின் தாயையும், பாட்டியையும் ஓர் இடத்தில் நிற்க வைத்துவிட்டு, குழந்தையை தூக்கிக் கொண்டு மர்ம பெண் சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் அந்தப் பெண்ணை காணாததை அடுத்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் மருத்துவமனை வளாக சிசிடிவி காட்சி பதிவுகள் உதவியுடன் மர்ம பெண்ணை அடையாளம் கண்டறிந்து தேடி வருகின்றனர். சென்னையின் முக்கிய இடங்களான அரசு மருத்துவமனை மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் அடுத்தடுத்து குழந்தைகள் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

KIDNAPPED, CHENNAI, CENTRAL STATION, CHILDREN, BOY, GIRL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்