‘ரயில்வே தண்டவாளத்தில் கிடந்த பச்சிளம் குழந்தை மீட்பு’!.. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ரயில்வே கேட் அருகே ஆதரவற்ற நிலையில் கிடந்த பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கண்டாமங்கலம் அருகே உள்ள ஆழியூர் பகுதியில் உள்ள ரயில்வே கேட் அருகாமையில் இருந்த புதரில் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தை மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிறந்த சில மணி நேரமே ஆன நிலையில், குழந்தை தொப்புள் கொடியுடன் கழுத்தை நெறித்து தூக்கி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, முட்புதரில் கிடந்த குழந்தை அழும் சத்தம் கேட்ட கெளசல்யா என்ற பெண், குழந்தையை மீட்டு கண்டமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்துள்ளார். இதையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக குழந்தை அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வரும் இந்த குழந்தையை தனக்கே தரும்படி கெளசல்யா கேட்டுள்ளார். மேலும், பலர் அந்த குழந்தையை தத்தெடுக்க முன் வந்துள்ளனர்.

VILLUPURAM, BORN CHILD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்