‘ஹெச்.ராஜா திறமையானவர்’!.. காரைக்குடியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் ஹெச்.ராஜாவுக்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. அதனால் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில், காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் கூட்டணி கட்சியான பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவுக்கு ஆதரவாக நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ‘இதுவரை 12 கூட்டங்களில் பேசியுள்ளேன், தொண்டை சரியில்லை. பாஜக மூத்த நிர்வாகி ஹெச்.ராஜா திறமையானவர். அவருக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்.

திமுக சந்தர்ப்பவாத கூட்டணி. மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பாட்டால்தான் மக்களுக்கு நன்மை கிடைக்கும். திமுக ஒரு கம்பெனி. அங்கு பணம் செலுத்தி பங்கு சேர வேண்டும். அப்பத்தான் சீட் கிடைக்கும். திமுகவில் 20 பேர் வாரிசு வேட்பாளர்கள்’ என முதல்வர் பழனிசாமி விமர்சனம் செய்தார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் பழனிசாமி, ‘காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கு அனைத்து திட்டங்களும் வந்து சேரும். கட்டணமில்லா கேபிள் இணைப்பு, ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும். அதிமுக மக்களுக்கான கட்சி’ என்று தெரிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்