"அசீம் வழக்குல இதுதான் எவிடென்ஸ்".. கதிர் கொண்டு வந்த பொருள்.. விழுந்து விழுந்து சிரிச்ச போட்டியாளர்கள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertising
>
Advertising

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து, கடந்த வார இறுதியில் நிவாஷினி வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டினுள் கோர்ட் டாஸ்க் துவங்கி இருக்கிறது. இதன்படி, பிக்பாஸ் வீடு இந்த வாரம் நீதிமன்றமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் நீதிமன்றம் என்ற பெயரில் இந்த டாஸ்க் ஆரம்பமாகும் நிலையில், ஒவ்வொருவராக தங்களது வழக்கு என்ன என்பதை மெயின் டோர் கேமரா முன்பு பதிவு செய்யலாம். இதன் பின்னர் குற்றம் சாட்டப்பட்ட நபருக்காக வழக்கறிஞரை தேர்வு செய்து அவரது வழக்கை தயார் செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த டாஸ்க்கின்படி பலரும் தங்களுக்கு சரியில்லை எனத் தோன்றும் விஷயங்கள் குறித்து வழக்கு தொடுக்க, அதற்கான விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தனலட்சுமி அசீம் மீது புதிய வழக்கு ஒன்றை தொடுத்திருக்கிறார். அதில், அசீம் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் பழங்களை தானே எடுத்து சாப்பிட்டு விடுவதாகவும் அதனை விசாரிக்கும்படியும் கூறியிருந்தார்.

தனலட்சுமி தொடுத்த இந்த வழக்கில் மைனா நந்தினி நீதிபதியாக செயல்படுகிறார். அசீமுக்காக ஜனனி வாதாடுகிறார். அப்போது, தனலட்சுமிக்காக ஆஜராகும் கதிரவன் இந்த வழக்கின் முக்கிய எவிடென்ஸ் என ஒரு பாட்டிலை நீதிபதி நந்தினியிடம் காண்பிக்கிறார். தொடர்ந்து பேசும் கதிரவன்,"இது செரிமானத்துக்காக குடிக்கிற சிரப். இதை அவரு மட்டுமே உபயோகிக்கிறார்" என்றதும் அதனை மறுப்பதாகவும் அது குயின்சி உடையது என்றும் சொல்கிறார் அசீம்.

தொடர்ந்து,'இந்த சிரப் உங்களுடையதா?' என கதிரவன் அசீமிடம் கேட்க அதில் தனது பெயர் இருப்பதாக ஒப்புக்கொள்கிறார் அசீம். அப்போது பேசும் கதிரவன்,"செரிமானத்திற்காக குடிக்கும் இந்த சிரப்பையே அவர் ஜூஸ் போலத்தான் குடித்து வந்திருக்கிறார். அப்படியென்றால், அவர் பழங்களை எப்படி சாப்பிடுவார் என்பது உங்களுக்கே விளங்கியிருக்கும்" என சிரித்தபடி சொல்ல அங்கிருந்த அனைவருமே இதைக்கேட்டு சிரிக்கின்றனர்.

 

BIGGBOSS, AZEEM, DHANALAKSHMI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்