"ஒரு நல்ல நண்பனா எனக்காக அதை செஞ்சிருக்காரு".. விக்ரமனை நெகிழ வச்ச ADK..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பிக்பாஸ் சீசன் 6-ன் போட்டியாளர்களான விக்ரமன், ஷிவின், ராம் மற்றும் ADK ஆகியோர் நம்முடைய சேனலுக்கு பிரத்யேக நேர்காணல் அளித்திருக்கின்றனர்.

Advertising
>
Advertising

                     Images are subject to © copyright to their respective owners.

தமிழில் சிறந்த ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக இருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி, இதுவரை மொத்தம் ஆறு சீசன்கள் முடிவடைந்துள்ளது. அந்த வகையில் இதன் ஆறாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக முடிவுக்கு வந்திருந்தது.

மொத்தம் 106 நாட்கள் நடந்த இந்த நிகழ்ச்சியின் ஃபினாலேவிற்கு அசிம், ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகியோர் முன்னேறி இருந்தனர். மொத்தமுள்ள 21 போட்டியாளர்களில் இருந்து இந்த மூன்று பேர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி இருந்த சூழலில், ஆறாவது பிக் பாஸ் சீசனின் டைட்டில் வின்னராக அசிம் தேர்வாகி இருந்தார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை விக்ரமனும், மூன்றாவது இடத்தை ஷிவினும் பிடித்திருந்தனர்.

பிக்பாஸ் சீசன் 6

தொடர்ந்து பிக் பாஸ் குறித்த பேச்சுகள் இணையத்தில் பரவலாக இருந்து வருகிறது. இதற்கு காரணம் பிக் பாஸ் போட்டியாளர்கள் பல்வேறு இன்டர்வியூகள் கொடுத்து வருவதும், பல இடங்களில் செல்லும் போது மக்கள் அவருக்கு கொடுக்கும் அமோக வரவேற்பும் ஆகும். பிக்பாஸ் சீசன் 6-ன் போட்டியாளர்களுக்கு என சோசியல் மீடியாவில் ரசிகர் படையும் உருவாகி, போட்டி குறித்தும் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களின் பங்களிப்பு குறித்தும் விவாதங்கள் நடத்தி வந்தனர்.

இந்த சூழ்நிலையில் பிக்பாஸ் சீசன் 6-ன் போட்டியாளர்களான விக்ரமன், ஷிவின், ராம் மற்றும் ADK ஆகியோர் நம்முடைய சேனலுக்கு பிரத்யேக நேர்காணல் ஒன்றை அளித்திருக்கின்றனர்.  பிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்பட்ட தங்களுக்கிடையேயான நட்பு குறித்தும், 106 நாட்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் கிடைத்த அனுபவங்கள் பற்றியும் மனம் திறந்து பேசியிருக்கின்றனர்.

நெகிழ்ந்த விக்ரமன்

பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போதே எளிய மக்களுக்காக ஒரு அறக்கட்டளையை திறக்க விரும்புவதாக விக்ரமன் பல முறை குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் அதற்காக ADK அறம் வெல்லும் எனும் பாடல் ஒன்றை உருவாக்கி வருவதாகவும் தனது நண்பனாக இதை அவர் செய்திருப்பதாகவும் விக்ரமன் உருக்கத்துடன் பேசியிருக்கிறார். இதுபற்றி விக்ரமன் பேசுகையில்,"வீட்டுக்குள்ளேயே இதை சொல்லியிருக்கேன். அது என்னோட பெரிய கனவு. அப்போதே அதுக்காக பாடல் ரெடி பண்ணி தரேன்னு ADK சொல்லிருந்தாரு. நான் கேட்காமலேயே அதை செஞ்சிருக்காரு. அவரோட பெரிய மனசு இது. நட்புக்காக இவ்வளவு செஞ்சிருக்காரு-ன்னு நினைக்கும்போது ரொம்ப பெருமையா இருக்கு" என்றார்.

இந்த பாடலுக்கான இசை தயாராகிவிட்டதாகவும், விரைவில் பாடல் வெளியிடப்படும் எனவும் ADK தெரிவித்திருக்கிறார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

 

BIGGBOSS, VIKRAMAN, ADK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்