'பாரதி பாஸ்கருக்கு என்ன ஆச்சு'... 'திடீரென மருத்துவமனையில் அனுமதி'... மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பட்டிமன்றங்களில் தனது பேச்சாற்றலால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர் தான் பாரதி பாஸ்கர்.

சாலமன் பாப்பையா பட்டிமன்றங்களில் தனது பேச்சாற்றலால் பிரபலமானவர் பாரதி பாஸ்கர். இவரும் பட்டிமன்ற பேச்சாளர் ராஜாவும் சேர்ந்து பங்கேற்கும் பட்டிமன்றத்தில் நகைச்சுவைக்குக் குறைவே இருக்காது. இந்நிலையில் பாரதி பாஸ்கர் உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீட்டிலிருந்த பாரதி பாஸ்கருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று இரவு அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், அவரது மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாயில் பிரச்சினை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்தனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார்கள். இதற்கிடையே பாரதி பாஸ்கர் விரைவில் நலம் பெற்று வரவேண்டும் என நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இதேபோல், பல்வேறு பிரபலங்களும், பொதுமக்களும் சமூக ஊடகங்கள் வாயிலாக பாரதி பாஸ்கர் நலம் பெற வாழ்த்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்