முட்புதரில் கிடந்த 'குழந்தை' சடலம்... தாயிடம் 'விசாரித்த' போலீசாருக்கு... காத்திருந்த வேற லெவல் 'அதிர்ச்சி'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் காவிரி கரையோரம் அருகிலுள்ள முட்புதர் ஒன்றில் பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தையின் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு வந்த போலீசார், குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், குழந்தையின் சடலத்தை புதரில் வீசியது யார் என்பது குறித்த தகவல் கிடைத்தது. அரியலூர் மாவட்டம், பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த பானுப்ரியா என்பது தெரிய வந்தது. கர்ப்பிணியாக இருந்த பானுப்ரியாவிற்கு கடந்த சில தினங்களுக்கு முன் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

அப்போது அவருக்கு பிறந்த பெண் குழந்தை இறந்தே பிறந்த நிலையில், அதிர்ச்சியில் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் பானுப்ரியா தவித்துள்ளார். இதனால் இறந்த பெண் குழந்தையை அடர்ந்த முட்புதரில் வீச முடிவு செய்து அங்கு வீசியதாக போலீசார் விசாரணையில் அவர் தெரிவித்துள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்