பிரபல திரை அரங்கில் 3 Screens.. படம் திரையிடுவது பற்றி விஜய், அஜித் ரசிகர்கள் சேர்ந்து எடுத்த முடிவு!!.. வைரல்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித் ஆகியோர். இவர்கள் இருவரின் திரைப்படமும் ஒரே நாளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (11.01.2023) வெளியாக உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "மகளை பத்தியாச்சும் கொஞ்சம் நெனச்சு இருக்கலாம்".. வெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பியதும் குடும்பத்துடன் நபர் எடுத்த விபரீத முடிவு!

அஜித் குமார் நடிப்பில் அடுத்ததாக துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள், ட்ரைலர் உள்ளிட்டவை வெளியாகி மக்கள் மத்தியில் விறுவிறுப்பை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், ரிலீஸ் நாளையும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இயக்குனர் H வினோத்துடன் துணிவு திரைப்படம் மூலம் இணைந்துள்ளார் நடிகர் அஜித். அதே போல, இந்த மூன்று படங்களையும் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகர் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கென், வீரா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிந்துள்ளார்.

துணிவு திரைப்படத்தை போலவே,  விஜய்யின் திரைப்படமான "வாரிசு" கூட 11.01.2023 அன்று வெளியாக உள்ளது. வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த திரைப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். இந்த படத்தில், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், ஜெயசுதா, பிரபு, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

அஜித் மற்றும் விஜய் என இரண்டு பெரிய ஹீரோக்களின் திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் ரிலீஸ் ஆவதால், இருவரின் ரசிகர்களும் உச்சகட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர். அதே போல, ரசிகர்கள் மத்தியில் ஒரு சிறு போட்டியும் கூட உருவாகி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த நிலையில், 3 ஸ்க்ரீன்களை கொண்ட திரை அரங்கு எடுத்த முடிவு தொடர்பான வீடியோ தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

பிரபல திரை அரங்கு ஒன்றில் மொத்தம் 3 ஸ்க்ரீன்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஒரு ஸ்க்ரீனில் வாரிசு திரைப்படமும், மற்றொரு ஸ்க்ரீனில் துணிவு திரைப்படமும் வெளியாவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. மூன்றாவது ஸ்க்ரீனில் எந்த திரைப்படம் வெளியாக வேண்டும் என்ற சூழலில், தியேட்டர் நிர்வாகத்தினர் முன்னிலையில், அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் நிற்க டாஸ் போட்டு வெற்றி பெறும் பக்கம் மூன்றாவது ஸ்க்ரீன் வழங்கப்படும் என முடிவு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி, டாஸ் போட்டதில் துணிவு படத்திற்கு மூன்றாவது ஸ்க்ரீன் கொடுக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த திரை அரங்கின் 2 ஸ்க்ரீன்களில் துணிவு திரைப்படமும் ஒரு ஸ்க்ரீனில் வாரிசு திரைப்படமும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | "அஜித் என் தம்பி மாதிரி, இப்டி தான் கூப்பிடுவேன்".. போனி கபூர் சுவாரஸ்யம்.. பிரபு பட டைட்டிலை நினைவுகூரும் ரசிகர்கள்..

VIJAY, AJITHKUMAR, VARISU, THUNIVU, AJITH AND VIJAY FANS, THEATRE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்