அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் காலமானார்..! அரசியல் தலைவர்கள் இரங்கல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் உடல்நலக்குறைவால் காலமானார்.  

தமிழகத்தின் முன்னாள் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஓ.பாலமுருகன், ஓ.ராஜா, ஓ.சுந்தர் என மூன்று சகோதரர்கள். இதில் இரண்டாவது தம்பியான ஓ.பாலமுருகன் புற்று நோயால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரத்தில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து நேற்றிரவு பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டுக்கு அவர் திரும்பினார்.

இந்த நிலையில் இன்று அவர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து பெரியகுளத்திற்கு சென்று கொண்டிருக்கிறார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.பாலமுருகனின் மறைவிற்கு, அனைத்துக்கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்