நடிகை யாஷிகா ஆனந்த்துக்கு இறுகும் பிடி!.. அடுத்தடுத்து லாக் செய்யும் போலீசார்!.. விபத்தால் தொடரும் விளைவுகள்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் சிக்கிய சம்பவத்தில் அவருக்கு மேலும் புதிய சிக்கல்கள் உருவாகி வருகின்றன.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்த நடிகை யாஷிகா ஆனந்த், கடந்த சனிக்கிழமை (24.7.2021) இரவு புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக காரில் சென்னைக்கு வந்த போது மகாபலிபுரம் அருகே விபத்தில் சிக்கினார்.

இந்த விபத்தில் யாஷிகாவுடன் காரில் வந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த அவரது பெண் தோழி வள்ளி ஷெட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்ற ஆண் நண்பர்கள் இருவரும், யாஷிகாவும் படுகாயத்துடன் கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், விபத்து நடந்த இடத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாத நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள யாஷிகா ஆனந்த்திடம் மாமல்லபுரம் ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது காரை ஓட்டிவந்தது யாஷிகா ஆனந்த் தான் என்பதும், மது அருந்திவிட்டு அவர் வாகனத்தை ஓட்டவில்லை என்பதும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், அதிவேகமாக காரை ஓட்டியதால் தான் விபத்து நிகழ்ந்ததாகக் கூறும் போலீசார், விபத்தின் மூலம் மரணத்தை விளைவித்தல், அதிவேகமாக வாகனத்தை இயக்குதல் என்ற இரண்டு பிரிவுகளின் கீழ் யாஷிகா ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன் நீட்சியாக, தற்போது நடிகை யாஷிகா ஆனந்த்தின் ஓட்டுநர் உரிமத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், மருத்துவமனையில் இருந்து யாஷிகா குணமடைந்த பிறகு அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாமல்லபுரம் போலீஸ் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், விபத்திற்கு முன்பு நடிகை யாஷிகா கார் ஓட்டிய வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்