"ஒவ்வொரு தடவை கீர்த்தி பத்தி Gossip வரும்போதும்".. .மனம் திறந்த கீர்த்தி சுரேஷின் பெற்றோர்..Exclusive..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நடிகை கீர்த்தி சுரேஷின் பெற்றோர் சுரேஷ் மற்றும் மேனகா ஆகியோர் நம்முடைய சேனலுக்கு பிரத்யேக நேர்காணல் அளித்திருக்கின்றனர். இதில் கீர்த்தி சுரேஷின் சினிமா வாழ்க்கை குறித்து பல்வேறு தகவல்களை இருவரும் பகிர்ந்துள்ளனர்.

Advertising
>
Advertising

கீர்த்தி சுரேஷ்

தற்போதைய நிலையில் தென்னிந்தியாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக அறியப்படுபவர் கீர்த்தி சுரேஷ். இவருடைய தந்தை சுரேஷ் தயாரிப்பாளர் ஆவார். தாய் மேனகா பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். 2000 ஆம் ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தவர் கீர்த்தி சுரேஷ். இதை தொடர்ந்து கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான கீதாஞ்சலி திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இது அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. மோகன்லால் நடித்திருந்த இந்த படத்தில் இரட்டை வேடத்தில் அசத்தியிருந்தார் கீர்த்தி.

Images are subject to © copyright to their respective owners.

தேசிய விருது

இதனை தொடர்ந்து தமிழில் இது என்ன மாயம், சீமராஜா, பைரவா, தொடரி, சண்டக்கோழி, தானா சேர்ந்த கூட்டம், சாமி இரண்டாம் பாகம் என முன்னணி நடிகர்களுடன் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இதனிடையே மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகும் மாமன்னன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதேபோல் நடிகர் நானியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடிக்கும் தசரா எனும் பான் இந்திய பிரம்மாண்டத் திரைப்படமும் வரும் 30.3.2023 அன்று வெளியாகவுள்ளது.

இதனிடையே கடந்த 2018 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான மகாநதி திரைப்படம் தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளிவந்தது. இதில் பழம்பெரும் நடிகை சாவித்ரியாக திரையில் தோன்றி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க செய்திருந்தார் கீர்த்தி சுரேஷ். இந்த படத்திற்காக அவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது.

Images are subject to © copyright to their respective owners.

வதந்திகள்

இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் பெற்றோரான சுரேஷ் - மேனகா தம்பதி நம்முடைய சேனலுக்கு பிரத்யேக நேர்காணலை அளித்திருக்கின்றனர். அப்போது கீர்த்தி சுரேஷ் குறித்து வெளிவரும் வதந்திகள் குறித்து பேசிய மேனகா," அப்படி வர்ற தகவல்களை நான் பார்ப்பேன். என்ன எழுதிருக்காங்கன்னு. ஆனால் அதை பத்தி கீர்த்திக்கிட்ட கேட்க மாட்டேன். நம்ம குழந்தைகளை பத்தி நமக்கு நல்லா தெரியும்போது இதெல்லாம் பத்தி கவலைப்பட வேண்டாம். நம்ம முன்னேறும்போது தான் நமக்கு புகழ் கிடைக்கும் போதுதான் இப்படி கிசுகிசு எல்லாம் வரும். அதை பெருசுபடுத்தவே கூடாது. ஒருவேளை அவளது திருமணம் பற்றி முடிவெடுத்தாலும் முதல்ல எங்ககிட்ட தான் பேசுவா. நாங்களே அதை வெளியில சொல்லுவோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.

 

 

KEERTHY SURESH, PARENTS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்