"ஆதித்த கரிகாலனால் எப்படி நந்தினியை மறக்க முடியாதோ.. அதேபோல".. பொன்னியின் செல்வன் - 2 விழாவில் விக்ரம் நெகிழ்ச்சி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பொன்னியின் செல்வன் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் படம் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.

Advertising
>
Advertising

                    Images are subject to © copyright to their respective owners.

அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார். இதனை லைகா நிறுவனம் பெரும் பொருட் செலவில் தயாரித்திருக்கிறது. பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  கடந்த 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவியது.  இந்த படம் உலகம் முழுவதும் 500+ கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது.

Images are subject to © copyright to their respective owners.

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம்  PS-2 திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த பொன்னியின் செல்வன் படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்துள்ளார், கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில், நேரு உள்விளையாட்டரங்கத்தில் நேற்று நடைபெற்ற இசை & டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் கமல்ஹாசன், ரேவதி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய விக்ரம்,"ஆதித்த கரிகாலனால் எப்படி நந்தினியை மறக்க முடியாதோ, அதேபோல் என்னால் இந்த படத்தில் நடித்ததை மறக்க முடியாது. ஆதித்த கரிகாலன் போன்ற கதாபாத்திரம் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு. மணி ரத்னம் வாழும் காலத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன், அவர் இயக்கிய சினிமாவில் நானும் இருக்கிறேன். இரண்டு முறை இராவணன், இரண்டு முறை பொன்னியின் செல்வன் ஆக மொத்தம் 4 முறை அவருடன் படம் நடித்திருக்கிறேன். தயாரிப்பாளர் சுபாஸ்கரன் உத்வேகம் அளிக்கக்கூடிய மிகச்சிறந்த மனிதர். அவருடன் பணிபுரிந்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

PONNIYIN SELVAN, VIKRAM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்