"மைக்கை பார்த்ததும் அப்படி வந்துடுச்சு".. சட்டுன்னு பழுவேட்டரையராக மாறிய சரத் குமார்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பொன்னியின் செல்வன் - 2 படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

Advertising
>
Advertising

                          Images are subject to © copyright to their respective owners.

அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  கடந்த 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவியது.  இந்த படம் உலகம் முழுவதும் 500+ கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது.

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம்  PS-2 திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த பொன்னியின் செல்வன் படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்துள்ளார்,  கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், நேரு உள்விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் மற்றும் கமல்ஹாசன், ரேவதி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

அப்போது பேசிய நடிகர் சரத் குமார், மைக்கை பிடித்ததும் பழுவேட்டரையர் போல "இங்கு கூடியுள்ள அனைவருக்கும்" என துவங்கிய அவர் "மைக்கை பார்த்ததும் அப்படி வந்துடுச்சு சாரி பாஸ்" என புன்னகையுடன் கூறிவிட்டு பேசிய அவர்,"ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. உலகளாவிய தமிழ் மக்கள் மட்டும் அல்ல. அனைத்து மொழிகளை சேர்ந்தவர்களும் இந்த படத்தை திரையரங்கில் பார்த்திருக்கிறார்கள். மாபெரும் வெற்றியை தந்த ரசிக பெருமக்களுக்கு என்னுடைய நன்றி. படத்தில் பெரிய பழுவேட்டரையராக நடிக்க வாய்ப்பு கொடுத்த மணிரத்னம் மற்றும் மொத்த படக்குழுவிற்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இரண்டாம் பாகத்தை காண உங்களைப்போல நாங்களும் ஆர்வத்துடன் இருக்கிறோம். படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்" என்றார்.

PONNIYIN SELVAN - 2, SARATH KUMAR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்