"ஜோசியர் சொன்னது இதுதானோ?".. சின்ன பழுவேட்டரையர் பார்த்திபனின் கலகல போஸ்ட்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நடிகர் பார்த்திபனின் சமீபத்திய ட்வீட் ஒன்று ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

                     Images are subject to © copyright to their respective owners.

அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார். இதனை லைகா நிறுவனம் பெரும் பொருட் செலவில் தயாரித்திருக்கிறது. பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  கடந்த 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவியது.  இந்த படம் உலகம் முழுவதும் 500+ கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது.

Images are subject to © copyright to their respective owners.

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம்  PS-2 திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த பொன்னியின் செல்வன் படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்துள்ளார், கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், நேரு உள்விளையாட்டரங்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இசை & டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் கமல்ஹாசன், ரேவதி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த சூழ்நிலையில் நடிகர் பார்த்திபன் தனக்கே உரித்தான பாணியில் ட்வீட் ஒன்றை தட்டியுள்ளார். அதில்,"பிற்காலத்தில நான்ஒரு round வருவேன்னு ஜோஸ்யர் சுகுமார் சொன்னார். அது இதுவோ?" எனக் குறிப்பிட்டு இருக்கிறார். அதனுடன் பொன்னியின் செல்வன் - 2 படத்தின் இசைவெளியீட்டு விழாவில் எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவில் பார்த்திபன் நிற்க, அவரை கேமரா வட்ட வடிவில் வீடியோ எடுத்திருக்கிறது. எப்போதும் வேடிக்கையான அதே வேளையில் சிந்திக்க தூண்டும் வகையில் பதிவுகளை எழுதும் பார்த்திபனின் இந்த பதிவு ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.

 

PONNIYIN SELVAN 2, PARTHIBAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்