'நிறைமாத கர்ப்பிணி மருமகளின் வயிற்றில் தீ வைத்த மாமியார்...' 'தீக்காயம் இருந்ததால் குழந்தையை...' மாமியார், மருமகள் சண்டையில் நடந்த கொடூரம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வாக்குவாதம் முற்றியதால் நிறைமாத கர்ப்பிணியான தனது மருமகளின் வயிற்றில் தீ வைத்து எரித்த மாமியார் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புஷ்பவள்ளி என்பவர் தஞ்சாவூர் மாவட்டம் பொட்வாச்சாவடி பகுதியில் தன் மகன் மற்றும் மருமகளுடன் வாழ்ந்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அவரது மருமகளுக்கும், மாமியார் புஷ்பவள்ளிக்கும் அடிக்கடி சண்டை வாக்குவாதம் ஏற்படுவது வழக்கமாக இருந்திருக்கிறது.

அதேபோல் இன்றும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நேரம் போகப்போக வாக்குவாதம் கைகலப்பில் முற்றியதால் ஆத்திரமடைந்த புஷ்பவள்ளி செய்வதறியாது  சமையலறைக்கு சென்று அங்கிருக்கும் மண்ணெணெய் கொண்டு வந்து மருமகள் வயிற்றிலேயே ஊற்றி தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது.

கர்ப்பிணி பெண் வலியால் துடித்து அலறியதை கேட்ட பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். பலத்த தீக்காயத்துடன் வந்ததால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து குழத்தையை வெளியே எடுத்தனர்.

வயிற்றில் தீ வைத்ததால் பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது குழந்தையும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, மாமியார் புஷ்பவல்லியை போலீசார் கைது செய்தனர். மேலும் எதனால் அவர்களுக்குள் சண்டை வந்தது என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மருமகளை வயிற்றில் தீ வைத்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்