வீட்டுக்கு அழைத்து..'8 நண்பர்களுடன்' சேர்ந்து.. 16 வயது பெண்ணை.. பொள்ளாச்சியில் நடந்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பொள்ளாச்சியில் 16 வயது பெண் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக கூறப்பட்ட, காரணத்திற்காக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பொள்ளாச்சியைச் சேர்ந்த பிரபல கும்பல் ஒன்று திருநாவுக்கரசு என்பவருடன் சேர்ந்து, அப்பகுதி கல்லூரி மாணவிகளை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டியதாக 19 வயது மாணவி அளித்த புகாரின் பேரில், வெளிவந்த வழக்கு தமிழ்நாட்டையே பதறவைத்தது.

இந்த நிலையில், பொள்ளாச்சியில் பாட்டி வீட்டில் தங்கி 10-ஆம் வகுப்பு பயின்று வந்த 16 வயது மாணவி, அங்கொரு இளைஞருடன் காதலாக பழகியுள்ளார். பின்னர், கடந்த வெள்ளிக் கிழமை அன்று, தன் வீட்டுக்கு வருமாறு அந்த இளைஞர் இந்த மாணவியை அழைத்ததன் பேரில், இவரும் சென்றுள்ளார்.

அன்றைய தினம் மாணவி வீடு திரும்பாததால், மாணவியின் தந்தை போலீஸில் புகார் அளித்துள்ளார். இதனடிப்படையில் விசாரணை செய்யப்பட்டு மாணவியின் காதலர் என்று கூறப்படும் இளைஞரை போலீஸார் கைது செய்து விசாரித்ததில், தன் வீட்டுக்கு வந்த மாணவியை, வெளிவிடாமல் தனது கஸ்டடியில் வைத்து கொடுமைப்படுத்தியதாகவும், தன்னுடைய 8 நண்பர்களுடன் சேர்ந்து அந்த மாணவியை கூட்டு பலாத்காரம் செய்ததாகவும் அந்த இளைஞர் ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது.

மீண்டும் பதறவைத்துள்ள, இந்த இன்னொரு பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சம்மந்தப்பட்ட இளைஞருடன் சேர்த்து, நேற்று முன்தினம் இரவு 6 பேரையும், தற்போது மேற்கொண்டு 3 பேரையும் என மொத்தமாக 9 பேரை போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்