'அவசர நேரங்களில் உதவும் 515 கணேசன்...' ' ஊரடங்கிலும் இலவசம் தான்...' இரும்பு வியாபாரியின் இளகிய மனம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அந்த காலம் முதல் இந்த காலம் வரை தனது கார் மூலம் பொதுமக்களுக்கு உதவி வருகிறார் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கணேசன். இவரது கார் நம்பரை சேர்த்து இவரை 515 கணேசன் என்றே அழைப்பார்களாம்.

515 கணேசன் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் வசித்து வருகிறார். பழைய இரும்பு வியாபாரியான இவர், 45 ஆண்டுகளுக்கு முன்னரே தான் வைத்திருந்த 515 என்ற எண்ணுடைய காரில் இதுவரை சுமார் 5,600-க்கும் மேற்பட்ட சடலங்களை கட்டணமின்றி ஏற்றிச்சென்று உதவியுள்ளார். இதன் காரணமாகவே இவருக்கு '515 கணேசன்' என்ற பெயர் வந்துள்ளது.
இவரது சேவையை அறிந்த சில தன்னார்வலர்கள் இவருக்காகவே மேலும் 2 கார்களை வாங்கிக்கொடுத்து அவருடைய பணியை மேலும் விரிவுப்படுத்த செய்துள்ளனர்.
இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் தன் மூன்று கார்களை கொண்டு மக்களுக்கு உதவி செய்து வருகிறார் கணேசன். கணேசன் தனது கார்கள் மூலம் உடல்நிலை சரியில்லாதவர்களை இலவசமாக ஏற்றிச்சென்று அரசு மருத்துவமனைகளில் சேர்த்துள்ளார். மருத்துவமனையில் இருந்தும் வீட்டுக்கும் அழைத்துச் சென்றதுடன், 8 சடலங்களை ஏற்றி சென்று உதவி வருகிறார்.
இதற்கு முன் ஏற்பட்ட இயற்கை பாதிப்புகளான தானே, ஒக்கி புயல், சென்னை மற்றும் கேரளாவில் பெருவெள்ளம் ஏற்பட்ட போது புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து நிவாரண பொருட்களை சேகரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொண்டு சென்று கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "யாரா இருந்தா என்ன.. வெளில வர்லாமா?".. 'ஊரடங்கில்' சொகுசு காரில் 'சிக்கிய' தொழிலதிபர் 'மகனுக்கு' தோப்புக்கரண 'தண்டனை'!
- 'கொரோனா' வைரஸ் வடிவில் 'கார்..!' 'ஹைதராபாத்' நிபுணருக்குத் தோன்றிய 'மகா சிந்தனை...' 'ஊரடங்கின்' நடுவே உலா வந்து 'விழிப்புணர்வு...'
- அதிவேகத்தில் 'மோதிவிட்டு' நிற்காமல் சென்ற 'கார்'... துரத்திச் சென்று பார்த்தபோது... 'ஒட்டுநர்' இருக்கையில் இருந்த 'நாய்'... 'அதிரவைக்கும்' சம்பவம்...
- 'சிலிண்டர்' லாரி மீது 'மோதிய' வேகத்தில்... அடியில் 'சிக்கிய' கார்... முன்பகுதி 'தீப்பிடித்து' கோர விபத்து...
- VIDEO: ஆம்புலன்ஸும், காரும் 'நேருக்குநேர்' மோதி கோரவிபத்து.. பெண் மருத்துவருக்கு நேர்ந்த கதி.. பலியான டிரைவர்..!
- காதலியின் ‘உடலை’ முன் இருக்கையில் வைத்து... ‘காரில்’ ஊர் ‘சுற்றிய’ இளைஞர்... ‘திடீரென’ நுழைந்தவரைப் பார்த்து ‘உறைந்துநின்ற’ போலீசார்...
- ‘தாய்’ ஓட்டிய கார் ‘திடீரென’ கட்டுப்பாட்டை இழந்ததால்... 6 மாத ‘குழந்தை’ உட்பட ‘3 பேருக்கு’ நிகழ்ந்த சோகம்... ‘பதறவைக்கும்’ சம்பவம்...
- ‘நாமக்கல் அருகே கோரவிபத்து’.. நள்ளிரவு லாரி மீது ‘நேருக்குநேர்’ மோதிய டாடா சுமோ.. 6 பேர் உடல் நசுங்கி பலி..!
- ‘அதிவேகத்தில்’ சென்ற கார்... ‘தவறான’ வழியில் வந்த டிராக்டருடன்... ‘நேருக்கு’ நேர் மோதி ‘கோர’ விபத்து... ‘12 பேர்’ பலியான சோகம்...
- கவனிக்காமல் கடந்த ‘பிஎம்டபிள்யூ’ கார்... ‘அதிவேகத்தில்’ வந்த மெட்ரோ ரயிலால்.. கண் ‘இமைக்கும்’ நேரத்தில் நடந்து முடிந்த ‘பயங்கரம்’...