விஷ வாயு தாக்கி 4 பேர் பலி - தூத்துக்குடியில் நடந்த சோக சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நேற்றைய தினம் நெய்வேலி என்.எல்.சியில் பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 6க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த நிலையில், தூத்துக்குடியில் விஷய வாயு தாக்கி 4 பேர் அடுத்தடுத்து பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. (இணைப்பில் உள்ள படம்: மாதிரி படம்).

தூத்துக்குடி செக்காரக்குடி பகுதியில் கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்யும் பணியில் இன்று சில தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.  அவர்கள் கழிவுகளை அகற்றிக்கொண்டிருந்தபோது தொட்டிக்குள் இருந்து திடீரென விஷ வாயு வெளிப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனை சுவாசித்த தொழிலாளர்கள் 4 பேரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இதுபற்றி அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  முதற்கட்டமாக உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்