இந்த கலசத்துக்குள்ள 'என்ன' இருக்கு தெரியுமா...? 'இத வீட்ல வாங்கி வச்சீங்கன்னா...' சதுரங்கவேட்டை பாணியில் சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருப்பூர் மாவட்டத்தில் சதுரங்க வேட்டை படம் போல  செல்வம் செழிக்கும் என கூறி  5 லட்சம் ரூபாய் பணம் பேரம் பேசி இரிடியம் தருவதாக கூறிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

ஆடு விற்பனை செய்வதை தன் தொழிலாக செய்யும் திருப்பூர் மாவட்டம் மூலனூரை சேர்ந்தவர் சாமிநாதன்.

மனிதர்களுக்கு ஆசை வந்துவிட்டால் கண்ணுக்கு எதுவும் தெரியாது என்பதை போல சாமிநாதன் அவர்களிடம் ஆசை வார்த்தை பேசி செல்வம் செழிக்க, வீட்டில் இரிடியம் வைக்க வேண்டும் என மூளை சலவை செய்துள்ளனர் மூன்று நபர்கள்.

அதுமட்டுமில்லாமல் தங்களிடம் கோபுர கலசத்தில் வைக்கும் இரிடியம் இருப்பதாகவும், அதன் விலை 25 லட்சம் ரூபாய் எனவும், முன்பணமாக 5 லட்சம் ரூபாய் கொடுத்தால் சில தினங்களில் அதனை கைமாற்றி அதன் பின் பாக்கி பணத்தை வாங்கிக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர் அந்த மூன்று ஆசாமிகள். அதனை நம்பி அவர்களிடம் 5 லட்சம் ரூபாயை சாமிநாதன் கொடுத்துள்ளார்.

அதன் பின் சில நாட்களாக 'இப்ப வரும்... அப்ப வரும்...' என இழுத்தடித்ததால் மோசடி கும்பலாக இருக்குமோ என  சாமிநாதனுக்கு சந்தேகம் வர திருப்பூர் குமாரசாமி நகரை சேர்ந்த ஆறுமுகம், சோமனூர் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த தனபால், திருப்பூர் குமாரசாமி நகரை சேர்ந்த ராஜா ஆகியோர் மீது பெரியநாயக்கன் பாளையம் போலீசில் தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசாரும் அந்த 3 நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். 

மேலும் அவர்கள் 3 பேரின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் மற்றும் அவர்கள் பயன்படுத்தி வந்த காரையும் பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

IRIDIUM

மற்ற செய்திகள்