‘அரசுப் பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து’.. ‘3 பேர் பலி; 34 பேர் படுகாயம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கிருஷ்ணகிரி அருகே அரசுப் பேருந்து மீது லாரி மோதிய கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்ட அரசுப் பேருந்து ஒன்று பயணிகளுடன் ஒசூர் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளது. பேருந்து சூளகிரியை அடுத்த சாம்பல் பள்ளம் அருகே சென்றுகொண்டிருந்த போது எதிர்த் திசையில் வந்த லாரி ஒன்றின் டயர் திடீரென வெடித்துள்ளது. இதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி மறுபுறம் வந்துகொண்டிருந்த பேருந்து மீது மோதியுள்ளது.

இந்த கோர விபத்தில் பேருந்து ஓட்டுநர் வேடியப்பன், நடத்துநர் சுதாகர் மற்றும் பயணி சின்னக்கண்ணு ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் பேருந்தில் பயணம் செய்த 6 பெண்கள் உட்பட 34 பேர் படுகாயமடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறியுள்ளார்.

KRISHNAGIRI, GOVENMENT, BUS, LORRY, ACCIDENT, DEAD, INJURED

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்