‘பொன்.மாணிக்கவேலின் அடுத்த அதிரடி..’ சிலைக்கடத்தலில் முக்கிய அமைச்சர்களுக்கு தொடர்பு..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சிலைக்கடத்தல் வழக்கில் இரண்டு அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி  பொன்.மாணிக்கவேல் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி காதர் பாட்ஷா வழக்கு தொடர்ந்திருந்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் தங்களையும் இணைக்குமாறு பொன்.மாணிக்கவேல் மற்றும் யானை ராஜேந்திரன் ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இதில் யானை ராஜேந்திரனின் மனுவை நிராகரித்த நீதிபதி, பொன்.மாணிக்கவேலின் இணைப்பு மனுவை மட்டும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளார். அப்போது சிலைக்கடத்தல் வழக்கு நேர்மையாக நடைபெற்று வருவதாக வாதிட்ட பொன்.மாணிக்கவேல் தரப்பு வழக்கறிஞர், சிலைக்கடத்தலில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து பேசிய நீதிபதி, இதுகுறித்து ஆதாரங்களுடன் பதில்மனு தாக்கல் செய்யுமாறு பொன்.மாணிக்கவேல் தரப்புக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

TAMILNADU, PONMANICKAVEL, IDOLTHEFT, MINISTERS, INVOLVED

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்