டியூசன் படிக்க வந்த மாணவிக்கு... ஆசிரியரால் நேர்ந்த கொடூரம்... கலங்கிப் போன பெற்றோர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

உசிலம்பட்டி அருகே 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவியை, தனியார் பள்ளி ஆசிரியர் கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை எழுமலையை அடுத்த எம்.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம் (35). இவர் மல்லப்புரம் தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இவரத பக்கத்து வீட்டைச் சேர்ந்த சிறுமி ஒருவர், அங்குள்ள அரசுப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். பாடம் தொடர்பான சந்தேகங்களை தீர்ப்பதற்காக, ஆசிரியர் செல்வத்திடம், டியூசன் படிக்க மாணவி சென்று வந்துள்ளார். அப்போது ஆசிரியர் செல்வம் மாணவியை மிரட்டியும், திருமணம் செய்து கொள்வதாக கூறியும் பாலியல் ரீதியாக மாணவியிடம் தவறாக நடந்துள்ளார்.

இதனால் அந்த மாணவி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி சார்பில் உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் செல்வத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TUTION, TEACHER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்