'மேட்ச்'ல தவான் செஞ்ச அந்த 'விஷயம்',,.. மொத்தமா வெச்சு செஞ்ச 'யுவராஜ்' சிங்... "அதுக்குன்னு இப்டியா கலாய்ச்சு தள்ளுறது??.."

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

டெல்லி அணி முதல் முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்தததால் பல கிரிக்கெட் வீரர்கள் உட்பட ஐபிஎல் ரசிகர்கள் அந்த அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நேற்றைய போட்டியில், டெல்லி அணி வெற்றி பெற மிக முக்கிய காரணமாக ஷிகர் தவானின் பேட்டிங்கும் அனைவரால் பாராட்டப்பட்டாலும் அவர் செய்த செயல் ஒன்று பலரால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

டெல்லி அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, சந்தீப் சர்மா வீசிய 19 ஆவது ஓவரில் ஷிகர் தவான் ஆட்டமிழந்தார். அப்போது அவர் LBW முறையில் அவுட் ஆன நிலையில், அது ரீப்ளேயில் அவுட் இல்லை என தெரிய வந்தது. முன்னதாக, DRS முறை கையில் இருந்த போதும், நடுவரிடம் அப்பீல் எதுவும் செய்யாமல் ஷிகர் தவான் அவுட் கொடுத்ததும் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

பின்னர் ஸ்க்ரீனில் அவுட் இல்லை என தெரிந்ததும் ஷிகர் தவான் வெளியே இருந்து சிரித்துக் கொண்டிருந்தார். இந்த சம்பவம் அதிகம் வைரலான நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஷிகர் தவானை குறிப்பிட்ட யுவராஜ் சிங், 'DRS இருப்பதை வழக்கம் போல மறந்து விட்டீர்களா?' என நக்கலடித்துள்ளார்.  

 

இதற்கு பதிலளிக்கும் வகையில் ஷிகர் தவான், 'முதலில் அந்த பந்து ப்ளம்ப் என நினைத்தேன். பவுண்டரி லைன் அருகே சென்ற பிறகு தான் அவுட் இல்லை என தெரிந்தது'  என தெரிவித்துள்ளார்.  இந்த பதிவு தற்போது நெட்டிசன்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது. 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்