மேட்ச்சின் நடுவே... திடீரென பிட்ச்சை விட்டு வெளியேறிய பும்ரா!.. தவறை சுட்டிக்காட்டிய ரசிகர்கள்!.. மைதானத்தில் காமெடி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பும்ரா செய்த சிறிய தவறு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் 5ம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 217 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்த போட்டியில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்படும் ஜஸ்பிரித் பும்ரா பெரிய ஏமாற்றம் கொடுத்தார். பும்ரா பொதுவாக எந்த களமாக இருந்தாலும் மிக விரைவில் விக்கெட் எடுத்து கொடுக்கக் கூடியவர். ஆனால், சவுத்தாம்ப்டன் பிட்ச் தற்போது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் போதிலும், சரியான லெந்தில் பந்துவீசுவதில் அவர் மிகவும் சிரமப்பட்டு வருகிறார். இதனால் ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். 

இன்று தொடங்கிய 5வது நாள் ஆட்டத்திலும் முதலில் சில பந்துகளை மிக ஷார்ட் லெந்த்தில் அவர் வீசி சொதப்பினார். பின்னர் அதனை சரிசெய்துகொண்டு மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளார். இந்நிலையில், பும்ராவை மீண்டும் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். விமர்சனங்களுக்கு இந்த முறை அவர் ஜெர்ஸியை தவறாக அணிந்து வந்தது தான் காரணம். 

இன்றைய போட்டி தொடங்கும் போது பும்ரா, டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஜெர்ஸியை அணிந்து வராமல், இந்திய அணியின் வழக்கமான டெஸ்ட் ஜெர்ஸியை அணிந்து வந்து விளையாடினார். மேலும், அதே ஜெர்ஸியை அணிந்துக்கொண்டு ஒரு ஓவரும் வீசினார். பின்னர் ரசிகர்கள் பார்த்து கண்டுபிடித்தவுடன் போட்டிக்கு இடையே ஓய்வறைக்கு சென்று தனது ஜெர்ஸியை மாற்றி வந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஒவ்வொரு அணியின் டெஸ்ட் ஜெர்ஸியிலும் நாடுகளின் பெயர் ஓரத்தில் அச்சிடப்பட்டு, ஸ்பான்சர்களின் பெயர் நடுவில் இடம்பெற்றிருக்கும். ஆனால், ஐசிசி நடத்தும் அனைத்து தொடர்களிலும், வீரர்களின் ஜெர்ஸியின் மையப் பகுதியில் தான் நாடுகளின் பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும்.

ஸ்பான்சர்களின் பெயர்கள் ஜெர்ஸியின் வேறு ஏதாவது பகுதியில் தான் இடம்பெற்றிருக்க வேண்டும். டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதல் முறையாக நடப்பதால் பும்ரா தவறுதலாக வழக்கமான ஜெர்ஸியை அணிந்து வந்து விளையாடிவிட்டார். இந்த சம்பவம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்