“எங்க டீம் ரொம்ப வலிமையா இருக்கு”.. “இந்த தடவை நிச்சயம் ஐபிஎல் கப் எங்களுக்குதான்”.. சுழற்பந்து வீச்சாளர் ஓபன் டாக்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் கோப்பை இந்த முறை தங்களது அணிதான் வெல்லும் என சுழற்பந்து வீச்சாளர் சஹால் தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

இந்தியாவில் 15-வது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த சனிக்கிழமை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 5 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இந்த ஆண்டு முதல் லக்னோ, குஜராத் என்ற 2 புதிய அணிகள் இணைந்துள்ளதால் அனைத்து அணியிலுள்ள வீரர்களும் கலைக்கப்பட்டு மெகா ஐபிஎல் ஏலம் நடைபெற்றது.

இதில் ஏற்கனவே ஒரு அணியில் விளையாடிய வீரர்கள் இந்த முறை வெவ்வெறு அணிகளுக்கு சென்றுள்ளனர். அந்த வகையில் 8 ஆண்டுகளாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் சஹாலை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக சஹால் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘ஐபிஎல் அணிகளில், ராஜஸ்தான் ராயல்ஸ் வலுவான அணியாக உள்ளது. ஏனென்றால் தொடக்கம், மிடில் ஆர்டரில் திறமையான வீரர்கள் உள்ளனர். ஆல்ரவுண்டர், பவுலர்கள் என அனைத்துமே ராஜஸ்தானில் மிக சிறப்பாக உள்ளது. இதை வைத்து பார்க்கும் போது இந்த முறை ராஜஸ்தான் அணிதான் பலம் வாய்ந்த அணியாக இருக்கிறது. ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற தகுதியுள்ள அணியாகவும் உள்ளது. அதனால் இந்த முறை நிச்சயம் எங்களுக்குத்தான் ஐபிஎல் கோப்பை’ என சஹால் கூறியுள்ளார்.

நேற்று ராஜஸ்தான் அணி, ஹைதராபாத் அணியை எதிர்த்து விளையாடியது. அப்போட்டியில் 210 ரன்களை குவித்த ராஜஸ்தான் அணி, ஹைதராபாத்தை 149 ரன்களுக்குள் சுருட்டி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் சஹால் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

RR, IPL, CHAHAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்