‘இதுக்கு மேல’... ‘எங்க கையில எதுவும் இல்ல’... ‘எல்லாம் அவர் செயல்’...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பிளே-ஆஃப் சுற்றிற்கு முன்னேறுவது கடவுள் கையில்தான் உள்ளது என்று கே.கே.ஆர். அணியின் கேப்டன் இயான் மார்கன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய சிஎஸ்கே -பஞ்சாப் அணிகளுக்கிடையிலான போட்டியில் சிஎஸ்கே வெற்றி மூலம் பஞ்சாப் அணியின் பிளே-ஆப் கனவு தகர்ந்தது. ஆனால் கேகேஆர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் கேகேஆர் வெற்றி பெற்றுள்ளது.

இதையடுத்து 14 புள்ளிகளுடன் ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது கேகேஆர் அணி. ஆயினும் நெட் ரன்ரேட் குறைவாக உள்ளதால் அந்த அணியின் பிளே-ஆஃப் கனவு நனவாகுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ‘தங்களது கடமையை சரியாக செய்துள்ளதாகவும், பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது கடவுள் கையில் தான் உள்ளதாக’ கேகேஆர் அணியின் கேப்டன் மார்கன் கூறியுள்ளார்.

இன்று நடைபெறவுள்ள டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கிடையிலான போட்டியை சார்ந்தே கேகேஆர் அணியின் பிளே-ஆஃப் தகுதி இருக்கும். இதேபோல மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சன்ரைசர்ஸ் வெற்றி பெற்றாலும், கேகேஆர் பிளே-ஆஃப்பிற்கு தகுதி பெறும் வாய்ப்பு உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்